
Karthane En Thunaiyaaneer
Karthane En Thunaiyaaneer Lyrics
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் என் நிழலானீர்
கர்த்தனே என் துணையானீர்
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார்
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார்
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார்
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை