
Nandri Endru Sollugirom
Nandri Endru Sollugirom Lyrics
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா
நன்றி இயேசு ராஜா
கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா
ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
அடைக்கலமே கேடயமே நன்றிராஜா
அன்பே என் ஆறுதலே நன்றிராஜா
தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
புதுவாழ்வு தந்தீரே நன்றிராஜா
புதுபெலன் தந்தீரே நன்றிராஜா
ஊழியம் தந்தீரே நன்றிராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றிராஜா