
Parisuththa Aaviye
Parisuththa Aaviye Lyrics
பரிசுத்த ஆவியே, வாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
புது எண்ணையால், புது பெலத்தால்
பாத்திரம் நிரம்பி வழியட்டுமே
ஆத்தும ஆதாயம் செய்திடவே
அழியும் மக்களை மீட்டிடவே
அனுப்பும் தேவா ஆவியினை உம்
அற்புதம் இன்று விளங்கட்டுமே
சிம்சோனுக்கு நீர் இரங்கினீர்
புதிய பெலத்தை கொடுத்தீரே
சோர்ந்து போன ஊழியரே, உன்னை
உயிர்பிக்க செய்யும் அபிஷேகமே
உலர்ந்த எலும்புகள் உயிரடைய
உன்னத ஆவியை அனுப்பினீரே
சபைகள் வளர, கால் ஊன்றி நிற்க
எழுப்புதல் இன்று அனுப்பிடுமே