
Petror Unnai Maranthalum
Petror Unnai Maranthalum Lyrics
பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை துறந்தாலும்
தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்
குற்றம் பல புரிந்தாலும்
நீ சற்றும் தயங்காமலே
இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
நேசமாய் மன்னித்தருள்வார்
காசு ஒன்றும் கேட்பதில்லை
இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
தஞ்சம் என காத்துக்கொள்வார்