
Siluvai Sumantha Uruvam
Siluvai Sumantha Uruvam Lyrics
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே
நம்பி இயேசுவண்டை வா
பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் புவியில்
கர்த்தாவின் அன்பண்டை வா
ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே
பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்
நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்
தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்